tamilnadu

img

குடியுரிமை சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தி வாலிபர் சங்கம் பேரணி

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் எதிர்ப்பு பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மத்திய மண்டலம் மற்றும் சிஏஏ எதிர்ப்பு கூட்டமைப்பு மாணவர்கள் சார்பில் திருச்சியில் வியாழனன்று நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற கண்டன கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் லெனின் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் வரவேற்றார். மாநிலச் செயலாளர் பாலா, பொருளாளர் தீபா,  துணை செயலாளர் பாலச்சந்திர போஸ், துணைத்தலைவர் ப்ரியசித்ரா, மாநிலக்குழு உறுப்பினர் வினோதினி, மாவட்ட செயலாளர்கள் திருவாரூர் ஜோதிபாசு, நாகை சிங்காரவேலன், தஞ்சாவூர் அருளரசன், புதுக்கோட்டை நாராயணன், திருச்சி புறநகர் நாகராஜ், அரியலூர் அருண்பாண்டியன், ஏஒய்எப்ஐ மாவட்ட செயலாளர் செல்வகுமார், ஏஐஎஸ்எப் மாநில துணைத்தலைவர் தினேஷ், சமூக செயற்பாட்டாளர் மார்க்சியம் கார்க்கி ஆகியோர் கண்டன உரையாற்றினர். திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளர் ஜெய்குமார் நன்றி கூறினார். முன்னதாக வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானவில் இருந்து தொடங்கிய சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் எதிர்ப்பு பேரணி ராஜா காலனி வழியாக ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. 

;