tamilnadu

img

ஊராட்சி குடிநீரில் புழுக்கள் : மக்கள் பாதிப்பு

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகாவிற்கு உட்பட்ட நாச்சியார்கோவில் ஊராட்சியில் சுமார் நான்காண்டுகளுக்கு முன்பு பழைய மருத்துவமனை மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் சுமார் 100 அடி ஆழ்துளை போர் செய்யப்பட்டு அடிபைப் குடிநீர் வசதி அமைக்கப்பட்டது. அந்த அடிபைப்பில் நாச்சியார்  கோயில் சோலையப்பன் தெருவாசிகள், பொது மக்கள், பள்ளி மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் குடிதண்ணீருக்காக பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் அதில் கடந்த இரண்டு நாட்களாக பம்பில் தண்ணீர் அடித்தால் கருப்பு புழுக்களாக வந்து கொண்டிருக்கிறது. இதை குடித்த வர்கள் உடல் நலக் குறைவு பாதிப்பு ஏற்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. ஆகவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாச்சியார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான அடிபம்பை சுத்தப்படுத்தி புழுக்களை நீக்கி தூய்மையான குடிதண்ணீர் கிடைக்கவும் பள்ளி வளாகத்தில் குப்பைகள் கொட்டாமல் தூய்மையாக இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.