தஞ்சாவூர், அக்.30- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த செங்கமங்கலம் - அம்மையாண்டி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சிக்கன நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை வகித்து, பள்ளித் தாளாளர் வழக்கறிஞர் வி.ஏ.டி.சாமியப்பன் பேசுகையில், “மாணவ, மாணவிகள் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும். சிக்கனத்திற்கும், கஞ்சத்தனத்திற்கும் வேறுபாடு உள்ளது. வருவாய்க்கு மிகாமல் செலவு செய்ய பழக வேண்டும். பணத்தை சேமிப்பது மட்டுமல்ல, சிக்கனம் என்பது குடிநீர், உணவுப் பொருட்கள், மின்சாரம் என அனைத்தையும் சேமிக்க வேண்டும். பெற்றோர்கள் செலவுக்கு தரும் பணத்தை சேமித்து, அத்தியாவசியத் தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்” என்றார். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை பொருளாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சம்பத், துணை முதல்வர் சரோஜா, நிர்வாக அலுவலர் பிலவேந்திரராஜ், அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.