திருச்சிராப்பள்ளி, ஜூன் 5- நலவாரியத்தில் பதிவு செய்து இதுவரை பணப் பயன் கிடைக்காத ஆட்டோ, கட்டுமா னம். தையல், தள்ளுவண்டி, தரைக்கடை, கார், வேன் டிரைவர்களுக்கு உடனே நிவா ரண உதவித்தொகை வழங்க வேண்டும். நலவாரிய அலுவலகத்தில் உள்ள புரோக்கர்களை வெளியேற்ற வேண்டும். புரோகர்களுக்கு ஆதரவான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் வியாழனன்று தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் ராமர் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட துணைத்தலைவர் ஜெயபால், சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவ ராஜ், பொருளாளர் சம்பத், செயலாளர்கள் ஆட்டோ சங்க மணிகண்டன், சந்திரன், தரைக் கடை சங்க செல்வி, சாலை போக்கு வரத்து சங்க வீரமுத்து, கட்டுமான சங்க சந்திர சேகர், தையல் சங்க பிரமிளா, கல்யாணி, தரைக்கடை சங்க தலைவர் கணேசன், அன்பு செல்வன், மாறன், ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.