திருச்சிராப்பள்ளி, ஆக.18- கொரோனா காலத்தில் வாழ்வாதா ரத்தை இழந்து நிற்கும் ஆட்டோ தொழிலா ளர் குடும்பத்திற்கு மாதம் ரூ.7500 வழங்க வேண்டும். எஃப்சி, பர்மிட், இன்சூரன்ஸ் முடி வடைந்த நாளில் இருந்து ஓராண்டுக்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும். வங்கி மற்றும் தனி யார் நிதி நிறுவனங்களில் வாங்கிய வாகனக் கடன்களுக்கு தவணைக்கால அவகாசம் வழங்க வேண்டும். அபராத வட்டி போட க்கூடாது. நலவாரியங்களில் ஆன்லைன் பதி வை முறைப்படுத்த வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வே ண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு சார்பில் செவ்வா ய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை முன்பு ஆட்டோ சங்க பொறுப்பாளர் ஜெயபால் தலைமை வகித்தார். திருச்சி மாநகரில் கிழக்கு, ஜங்சன், தென்னூர், உறையூர், காட்டூர், பொன்மலை பகுதிகளில் 50 இட ங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணப்பாறை பேருந்து நிறுத்தம் அருகில் புற நகர் மாவட்ட தலைவர் நவமணி தலைமை வகித்தார். மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றி யம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ரவிச்சந்தி ரன் தலைமை வகித்தார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத் (சிஐடியு) தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.ஸ்ரீதர், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பொன்னமராவதி
பொன்னமராவதி காந்தி சிலை முன்பு காந்திசிலை கிளை பொருளாளர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து போக்குவரத்து சங்க பொறுப்பாளர் என்.பக்குருதீன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் சி.சண்முகம் தலைமை வகித்தார். ரோவர் காலேஜ், வயலப்பாடி, அகரம்சிகூர், வாலிகண்டபுரம் பாடாலூர், அரசு மருத்துவமனை பகுதி ஆட்டோ சங்க கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கரூர்
கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு எல்பிஎஃப் சங்க மாவட்ட செயலாளர் அண்ணாவேலு தலைமை வகித்தார்.