திருச்சிராப்பள்ளி: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருச்சி மாநகர கிளை சார்பில் விதைகள் கலை இலக்கிய சந்திப்பு ஞாயிறு அன்று நடை பெற்றது. கூட்டத்திற்கு கவிஞர் இளங்குமரன் தலைமை வகித்தார். இதில் யார் கைகளில் இந்து ஆலயங்கள்? என்ற நூலை முன்வைத்து தமுஎகச மாநில குழு உறுப்பினர் பேராசிரியர் செல்வகுமார் பேசினார். பின்னர் பாரதிதாசன் பல்கலை கழகத்தால் முன்னோடி பெண்களுக்கான விருது பெற்ற தமுஎகச எழுத்தாளர் சீத்தாவுக்கு பாராட்டு நடைபெற்றது. தமுஎகச மாவட்ட செயலாளர் ரங்கராஜன், மாநகர செயலாளர் சிவ.வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கவிஞர் முருகேஷ்மதி வரவேற்றார். கவிஞர் பூவிழி நன்றி கூறினார்.