தரங்கம்பாடி,ஜூலை 10- நாகை மாவட்டம் பெரம்பூர் அருகே கிளிய னூரில் உள்ள இந்தியன் ஓவர் சீஸ் வங்கியை முற்றுகை யிட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து அன்றாட உணவிற்கே கடும் சிரமத்தை நாள்தோறும் சந்திக்கும் சூழலில் வங்கி யில் பெற்ற குழுக்கடன்களை தொடர்ந்து கட்டவில்லை எனக் கூறி கிளியனூர் இந்தி யன் ஓவர்சீஸ் வங்கி மேலா ளர் மற்றும் வங்கி நிர்வா கத்தினர் வங்கி கணக்கு களை முடக்கி வைத்துள்ள னர். இதனால் நூறு நாள் வேலைக்கான ஊதியம், முதியோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட் டவை பெற முடியாமல் பயனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்ற னர். வங்கியின் இச்செயலை கண்டித்து நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் விஜயகாந்த் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டாலின் உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆர்ப்பாட் டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.