tamilnadu

img

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவி

பொன்னமராவதி, ஆக.30-  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டார வள மைய அலுவலக ஆயத்தப் பயிற்சி மையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.  விழாவிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார். தொட்டியம்பட்டி ஊராட்சித் தலைவர் சோலையப்பன், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாந்தக்குடிப்பட்டி மோகன், வெங்கடேஷ், சங்கையா, மலேசியா பாடகி பிரீத்தி புஷ்பாவதி ஆகியோர்  தொலைக்காட்சிப் பெட்டி, நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.  தீயணைப்பு நிலைய மீட்புக்குழு வீரர் குழந்தைவேல், சிறப்பு பள்ளி ஆசிரியைகள் பொன்னம்மாள், உதவியாளர் அம்சவள்ளி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்துல்கலாம் மன்ற ஆலோசகர் பாஸ்கர் இந்தியன் நன்றி கூறினார்.

;