tamilnadu

நலத்திட்ட உதவி வழங்கும் விழா

திருச்சிராப்பள்ளி, ஜன.11- திருச்சி மாவட்டம் முசிறி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல த்திட்ட உதவி வழங்கும் விழா வெள்ளியன்று நடைபெற்றது.   முசிறி வட்டாரத்தை சார்ந்த தன்னார்வ லர்கள், நன்கொடையாளர்களின் நிதியுதவில்  ரூ.4,46,900 மதிப்பில் 6 பயனாளிகளுக்கு இணை ப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், 10 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும், 13 பயனாளி களுக்கு காதுக்கு பின்புறம் அணியும் காதொ லிக் கருவி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல  அலுவலகத்தின் மூலமாக ரூ.3,18,000 மதிப்பில்  1 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான  மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அதிநவீன செயற்கை காலும், 12 பயனாளிகளுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய த்தின் மூலமாக நிதியுதவி என மொத்தம் ரூ.8,27,900 மதிப்பில் 42 பயனாளிகளுக்கு முசிறி  சார் ஆட்சியர்  பத்மஜா வழங்கினார்.

;