திருச்சிராப்பள்ளி, ஜூன் 1-இந்திய மாணவர் சங்கம் சார்பில் அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகத்தின் நான்கு முனைகளில் இருந்து சைக்கிள் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டனர். இதில் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமையிலான குழு மணப்பாறை வந்தது. பயணக் குழுவினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணப்பாறை வட்டச் செயலாளர் ராஜகோபால், வாலிபர் சங்க புறநகர் மாவட்ட தலைவர் பாலு, வட்டக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், சரவணன், சுரேஷ், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாணவர் சங்க மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் மாலை அணிவித்து சிறப்புரை ஆற்றினார். மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அருண் பிரசன்னா, துணை செயலாளர் செந்தமிழ், வாலிபர் சங்க வட்ட தலைவர் இளையராஜா, பொருளாளர் இளையராஜா, துணை செயலாளர்கள் விஜய், முருகேசன், மாசிலாமணி, மாவட்டக்குழு உறுப்பினர் சங்கர் ராஜ், காந்தி நகர் கிளை செயலாளர் பிரபு, மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், துணை ஒருங்கிணைப்பாளர் செல்வநாக, அர்ஜூன் கலந்து கொண்டனர்.