tamilnadu

img

தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்

தஞ்சாவூர், மே 31-தஞ்சாவூரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மக்களவைத் தொகுதி தேர்தல், சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறச் செய்தத ற்கான நன்றி அறிவிப்பு செயல் வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசியது, இத்தேர்தலில் ஒரு மாற்றத்தை உருவாக்கி யிருந்தால் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கும். என்றாலும், இது நல்ல தொடக்கம் தான். விவசாயக் கடன் ரத்து, நூறு நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக அதிகப்படுத்துவது உள்ளிட்ட வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றார் பழனிமாணிக்கம்.முன்னதாக, தஞ்சாவூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற டி.கே.ஜி. நீலமேகம் பேசுகையில், இத்தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி தோழர்களின் பணியால் வெற்றி பெற முடிந்தது. இந்த வெற்றிக்கு அரும்பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.கூட்டத்துக்கு திமுக வடக்கு மாவட்டச் செயலர் சு. கல்யாணசுந்தரம், தெற்கு மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன், வர்த்தக அணித் தலைவர் சி.நா.மீ. உபயதுல்லா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சித்தமல்லி நா. சோமசுந்தரம், காங்கிரஸ் மாவட்டத் தலைவ ர்கள் து. கிருஷ்ணசாமி வாண்டையார் (தெற்கு), டி.ஆர். லோகநாதன் (வடக்கு), திராவிடர் கழக மாநிலப் பொதுச் செயலர் இரா. ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி. அமர்சிங், மதிமுக மாவட்டச் செயலர் கோ. உதயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கோ. நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் மு.அ. பாரதி, விடுதலைச்சிறுத்தைகள் மைய மாவட்டச் செயலர் ச. சொக்கா ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;