தரங்கம்பாடி, ஜூன் 7- நாகை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் வழங்கல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஒன்றிய ஆணையர் தியாகராஜன் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம், பொதுமக்களுக்கு வழங்குவதில் ஏற்படும் தடங்கல், பற்றாக்குறை குறித்தும், அதை சரி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்ட கூட்டத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் உரையாற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அருண், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர்கள் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.