தஞ்சாவூர் ஜூன்.2-தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே புதிய கட்டிடங்கள் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ஆ.அண்ணாதுரை முன்னிலை வகித்தார். கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ 2.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர், ரூ.2 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூட ஆழ்குழாய் கிணறு மற்றும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, வணிக வளாகம் ஆகியவற்றை வேளாண் அமைச்சர் இரா. துரைக்கண்ணு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார், முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், வேளாண் இணை இயக்குனர் நெடுஞ்செழியன், பொதுவிநியோகத் திட்ட துணை பதிவாளர் தயாள விநாயகம் அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.