tamilnadu

img

மணல் திருட்டு வாகனங்களுக்கு தடை ஏற்படுத்திய கிராம மக்கள்

சீர்காழி, ஜன.18- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் மயானத்திற்குச் செல்லும் வழியைத் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றுக்குள் சென்று வர சாலை உள்ளது. இந்த சாலையின் வழியே கிராம மக்கள் ஆற்றுக்குள் சென்று நீராடி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. பொதுவாக மாதிரவேளூர் கிராம மக்கள் ஆற்றுக்குள் செல்லும் முக்கிய சாலையாக இந்த சாலை இருந்து வருகிறது.  ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த சாலையைப் பயன்படுத்தி சிலர் இரவு நேரங்களில் சுமார் 10 டிராக்டர் கள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மூலம் கொள்ளிடம் ஆற்றுக்குள் சென்று மணல் கடத்தி வந்தனர். இதனால் 300 மீட்டர் சாலை சேறும் சகதியாக மாறியது. இதனால் மயானத்திற்குச் செல்வோர்களும், கொள்ளிடம் ஆற்றுக்கு செல்வோர்க ளும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.  இந்நிலையில் பொதுமக்களின் தொடர் கோரிக்கையினை ஏற்று மாதிரவேளூர் ஊராட்சி சார்பில் சாலையில் 300 மீட்டர் தூரத்துக்கு பள்ளமாக உள்ள இடங்களில் மண் போடப்பட்டு பள்ளம் சரி செய்யப்பட்டது. மேலும் ஆற்றுக்குள் மணல் திருட வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சாலையின் குறுக்கே பொக்லைன் எந்திரம் மூலம் 16 அடி அகலத்திற்கு 4 அடி ஆழத்திற் கும் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் ஆற்றுக்குள் மணல் திருட வாகனங்கள் செல்ல முடியாமல் தடை செய்யப்பட்டுள்ளது. மணல் திருட்டை தடுக்க கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஊராட்சி சார்பில் செய்த இந்த செயலை அனைவரும் பாராட்டினர்.

;