தஞ்சாவூர், மே 29- ஒரத்தநாடு அருகே, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், எந்நேரமும் பூட்டியே கிடப்பதால், காடுவெட்டி விடுதி, சிவவிடுதி கிராம பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா 84, காடுவெட்டிவிடுதி கிராம நிர்வாக அலுவலர், பல நாட்களாக அலு வலகம் வராததால் பொதுமக்கள் தங்க ளுக்கு தேவையான பல விதமான சான்று கள் எதுவும் பெற முடியாமலும், கொரோ னா நோய் ஊரடங்கு சிரம நிலைகளை கூற முடியாமலும் அவதிப்பட்டு வருவ தாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், “இந்த கொரோனா நோயின் நேரத்தில் தான் பணிபுரியும் கிராமத்தில் தங்கியிருந்து, மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், தேவையான சான்றுகளை தடையின்றி வழங்க வேண்டியும், தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இத்தருணத்தில் கிராம நிர்வாக அலுவலர் தான் வேலை பார்க்கும் கிராமத்திற்கு பணிக்கு வராம லும், மக்களின் அடிப்படை தேவைக ளை பூர்த்தி செய்யாமலும், மக்கள் பிரதிநிதிகள் ஏதேனும் அவசர நிலை காரணமாக போன் செய்தால் அதனை எடுக்காமல் புறக்கணித்தும் வருகிறார். இதனால் இக்கிராத்தில் வசித்து வரும் விவசாயிகள், பொதுமக்கள், தொழிலாளிகள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட, வட்ட நிர்வாக அதிகாரிகள் கிராம மக்களின் நலன் கருதி ஒரு நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 மணி நேரமாவது இக்கிராமத்தில் பணிபுரியவும், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடவும் தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத் துள்ளனர்.