tamilnadu

img

ஆட்டோக்களுக்கு அநியாய அபராதம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் சிஐடியு போராட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.13- அரசு உத்தரவு என்ற பெயரில் எப்சி, இன்சூரன்ஸ், பர்மிட் இல் லாத ஆட்டோகளுக்கு ரூ 30,000 முதல் ரூ 40,000 வரை அபராதம் விதிப்பது மற்றும் புகை சான்றி தழ், கட்டண மீட்டர், முதலுவி பெட்டி இல்லை எனக் கூறி ரூ 15,000 அபாரதம் விதிப்பதை கை விட வேண்டும். அபராத தொகை யை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடிய ஆட்டோ ரிக்சா ஓட்டுனர் சங்கம் சார்பில் தொடர் முழக்க போராட் டம் நடைபெற்றது. இதில் 3வது நாளான வியாழ னன்று ஸ்ரீரங்கம் தேவி தியோட்டர் அருகில் நடைபெற்ற போராட் டத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதி தலை வர் மாணிக்கம், மேற்கு பகுதி தலைவர் அப்துல்கரீம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் மு.சிவாஜி, மாநிலத் தலைவர் குமார், மாவ ட்டச் செயலாளர் மணிகண்டன், துணை செயலாளர் வெற்றி வேல், பொருளாளர் அன்புசெல் வம் ஆகியோர் பேசினர். சிஐடியு நிர்வாகிகள் ஆட்டோ சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.