திருச்சிராப்பள்ளி, ஆக.29 - திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் வியாழனன்று மாலை 6 மணிக்கு கவர்னரின் தனி செயலாளர் ராஜகோபால் கல்லூரி டீன், இயக்குனர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யபட்டிருந்தது. கவர்னரின் செயலாளர் ராஜகோபால் வருகையையொட்டி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் பேராசிரியர்களுக்கு புதனன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில், “கவர்னரின் தனி செயலாளர் ராஜகோபால் வியாழனன்று மாலை 6 மணிக்கு பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் உள்ள ஏ.சி.ஆடிட்டோரி யத்தில் டீன், டைரக்டர்கள், துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார். இதனால் அனை வரும் ‘அழகான’ ஆடை அணிந்து வர வேண்டும். இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்த தாவது: இதுவரை கவர்னரின் தனிசெயலாளர் யாரும் எந்த பல்கலைக்கழகத்திலும் போய் கலந்துரையாடியது இல்லை. ஆனால் இவர் புதிதாக மாலை 6 மணிக்கு கலந்துரையாட வருவதற்கு பேரா சிரியர்கள், அலுவலர்கள் ‘அழகான’ ஆடை அணிந்து வரவேண்டும் என்று கூறு வது பல்கலைக்கழக மாண்புக்கு உகந்தது அல்ல. ‘டீசென்ட்’ உடையுடன் வர வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியது பேராசிரியர்களை கேவலப்படுத்தும் செயலாகும். இந்த கலந்துரையாடல் புதிய கல்விக் கொள்கை குறித்ததாக கூட இருக்கலாம். ஆளுநரின் செயலாளர் என்பது உதவியாளர் என்கிற அந்தஸ்துதான். ஆளுநரின் செயலாளருக்காக இப்படி ஒரு சந்திப்பு நடத்துவது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நீண்ட நாட்களாக தற்காலிக ஊழியர் களாக இருந்த 60 பேரை நிரந்தர பணி யாளராக வெள்ளியன்று நியமிக்க இருக்கிறார்கள். அதே போன்று கடந்த ஜூலை மாதம் உதவி பேராசிரியர் 14 பேர், பேராசிரியர் 14 பேர் என 54 பணியிடங்கள் நிரப்பப்படு வதற்கான வேலை வாய்ப்புகள் அறி விக்கப்பட்டு ஆகஸ்ட் 9ம் தேதியோடு விண்ணப்பிக்கும் கெடு முடிந்த நிலையில் தற்போது விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் நிலையில் ஆளுநரின் செயலாளர் வருகை பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த கலந்துரையாடல் குறித்து வியாழனன்று காலை ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில் காலை 10.30 மணியளவில் தீடீரென கவர்னரின் செயலாளர் வருகை ரத்து செய்யப்பட்டதாக பேராசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கவர்னரின் செயலாளர் எந்த தலைப்பில் கலந்துரையாடுகிறார் என்று தெரிவிக்கப்படவில்லை. இதே போன்று கலந்துரையாடல் ரத்து செய்யப் பட்டதற்கான காரணமும் பல்கலைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்படவில்லை.