tamilnadu

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டு ஆலோசனைக் கூட்டம்

கும்பகோணம், ஜூன் 20-  சாதிய வன்கொடுமைக்கு எதி ராகவும், ஆணவப் படுகொலை உள்ளிட்ட சம்பவங்களுக்கு முடிவு கட்டவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3-வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் 15, 16, 17-ம் தேதிகளில் தஞ்சையில் நடைபெறுகிறது. இதனை ஒட்டி மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து ஆலோ சனை கூட்டம் கும்பகோணத்தில், தமுஎகச மாவட்ட தலைவர் ஜீவ பாரதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செய லாளர் சாமுவேல் ராஜ், துணைப் பொதுச் செயலாளர் சின்னை பாண் டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமி ழருவி, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கௌதமன், வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா அப்துல் ரகு மான், மனிதநேய ஜனநாயக கட்சி யாசின் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொறுப்பாளர்கள் செல்வமணி, பழ.அன்புமணி, பகத்சிங், சிபிஎம் ஒன்றியச் செய லாளர்கள் பழனிவேல், சாமிக் கண்ணு, நகரச் செயலாளர் செந்தில் குமார் மற்றும் காப்பீட்டுக் கழக ஊழி யர் சங்கம், ஆசிரியர் கூட்டணி சங்கம், போக்குவரத்து தொழிலா ளர் சங்கம், அரசு ஊழியர் சங்கம், அரசு ஓய்வூதியர் சங்கம் ஆகிய வற்றின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், தஞ்சையில் நடை பெறுகிற 3 நாள் மாநாட்டிற்கு உத வும் வகையில் நிதி மற்றும் ஆலோ சனைகளை வழங்கினர்.