tamilnadu

img

திருச்சி: தனியார் கல்லூரி மாணவி தற்கொலை

திருச்சியில் தனியார் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
திருச்சி இலுப்பூர் தனியார் கல்லூரியில் பயின்று வந்த ஜார்க்கண்ட் மாணவி ஜப்ரா பர்வீன் நியூட்ரிசன் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இன்று கல்லூரியில் ஜப்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
இதையடுத்து தற்கொலை செய்து கொண்ட ஜப்ரா பர்வீனின் உடலை கைப்பற்றி கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

;