திருச்சிராப்பள்ளி, மார்ச் 24- உலக சுகாதார நிறுவனம் மற்றும் திருச்சி என்.ஐ.டி., இணைந்து கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி திரவம் தயாரித்துள்ளது. ஆல்கஹால் அடிப்ப டையிலான கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி திரவங்கள் பயனுள்ளவை என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தியும் கைகளை சுத்தம் செய்து, சுகாதாரத்தை பராமரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி, கைகள் சுத்தம் செய்வதைத் தான் எளிதானதாக கருதுகின்றனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் அதிகரித்து வரும் நிலையில், தேவை அதிகரிப்பை கருத்தில் கொண்டு, டாக்டர் சிண்ட்ரெல்லாவின் வழிகாட்டுதல்படி, டாக்டர் பிரியங்கா எடுத்த முயற்சியால், மருத்துவமனை ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் அனந்தராமன், வேதியியல் பொறியியல் துறை பேராசிரியர் டாக்டர் மீரா பேகம் ஆகியோர், 25 லிட்டர் கிருமி நாசினி திரவம் பாட்டில்கள் தயாரித்துள்ளனர். மேலும், கைகளை கழுவி சுத்தம் செய்ய சாத்தியமில்லாத இடங்களிலும், சூழ்நிலைகளிலும் இந்த பாட்டில் திரவத்தை பயன்படுத்தி, கை சுகாதாரத்தை பராமரிப்பது எளிது. என்,ஐ.டி., இயக்குனர் மினிஷாஜி தாமஸ், கிருமி நாசினி திரவம் பாட்டிலை அறிமுகப்படுத்தி வைத்தார். பதிவாளர் பழனிவேல் துறை மற்றும் பொது பயன்பாட்டிற் காக விநியோகித்தார். கிருமி நாசினி திரவத்தின் தேவை அதிகரித்து வருவதால், சில நாட்களில் 100 லிட்டர் அளவுக்கு திரவம் தயாரிக்க என்.ஐ.டி. குழு திட்டமிட்டுள்ளது.