tamilnadu

img

திருச்சி பாரதிதாசன் பல்கலை மாணவி தற்கொலை முயற்சி

திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி பாதரசத்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தில் ஆராய்ச்சி மாணவி சிவனேஸ்வரி என்ற மாணவி பயின்று வந்தார். இந்நிலையில் சிவனேஸ்வரி ஆய்வகத்தில் பாதரசத்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து மாணவி மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  


;