tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கக் கூட்டம்
திருச்சிராப்பள்ளி, அக்,13- தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமை யாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் திபெஷ் தலைமையில் ஞாயிறு அன்று ரோசன் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்தில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், உரிமையாளர்களுக்கான நல வாரியத்தை அரசு அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் புதிய பொதுச் செயலாளராக நவீன், மாநில பொருளாளராக ஆனந்த்குமார், துணைத் தலைவராக கோபி நாத், துணை பொதுச் செயலாளர்களாக முகமது இலியாஸ் மற்றும் சாகுல்ஹமீது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். பொரு ளாளர் ஆனந்த குமார் நன்றி கூறினார்.

ஆசிரியர் சங்கக் கூட்டம் 
திருச்சிராப்பள்ளி, அக்,13- தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் ஞாயிறு அன்று பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பீட்டர் ராஜா தலைமை வகித்தார். பக்கிரிசாமி வரவேற்றார். மாநில பொதுச் செய லாளர் ராஜு சிறப்புரை ஆற்றினார். மாநில பொருளாளர் அன்பரசன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். கூட்டத்தில் ஓராண்டு பணி நிறைவு செய்த உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை ஆணை வழங்க வேண்டும் 2019 20 ஆம் கல்வி ஆண்டிற்கான பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்ற நிபந்தனை யை தளர்த்த இடைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடி வடைந்தவுடன் நடத்தவேண்டும் உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி, அக்,13- திருச்சி கேர் அகாடமியில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மத்திய மாநில அரசு நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி துவக்க விழாவும் இந்த ஆண்டுக்கான நீட், ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை விதைக்கவும் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர் ஆர்பி, யுபிஎஸ்சி ஆகிய நுழைவு தேர்வு களுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி பெறும் முறை பற்றி விளக்கி சிகரம் தொட வா என்னும் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியும் ஞாயிறு அன்று கேர் அகடாமியின் ஆண்டாள் தெரு மையத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு மைய இயக்குனர் பேராசிரியர் முத்தமிழ்ச் செல்வன் தலைமை வகித்தார். சென்னை வரு மான வரித்துறை இணை ஆணையர் நந்தகுமார் சிறப்புரை ஆற்றினார். கவிஞர் கோவிந்தசாமி வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக ஆசிரியர் கிருஷ்ணவேணி முத்தமிழ்ச்செல்வன் வரவேற்றார். ஆசிரியர் முனியப்பன் நன்றி கூறினார். இதில் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.