tamilnadu

img

வேலை நேரத்தை உயர்த்த டிஆர்இயு எதிர்ப்பு

 திருச்சிராப்பள்ளி: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஒர்க் ஷாப்புகளை கார்ப்பரேசன் ஆக்குவதை கைவிட வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக் கூடாது. வேலை நேரத்தை 9 மணி நேரமாக உயர்த்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பாஜக அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்தும் டிஆர்இயு சார்பில் புதனன்று திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். உதவி பொது செயலாளர் மனோகரன் கண்டன உரையாற்றினார். கோட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

;