tamilnadu

திருச்சி- திருவனந்தபுரம்   ரயில் சேவையில் மாற்றம்

திருச்சிராப்பள்ளி: திருச்சி- திருவனந்தபுரம் இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை கோட்டத்தில் ரெயில்வே தண்டவாள பணியின் காரணமாக இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சேவை செவ்வாய்க்கிழமை மார்ச் 3-ஆம் தேதி முதல் வருகிற 10-ஆம் தேதி வரை (திங்கட்கிழமை தவிர) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  அதாவது திருச்சியில் இருந்து கோவில்பட்டி வரை மட்டும் ரெயில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் கோவில்பட்டியில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு வரும். கோவில்பட்டி- திருவனந்தபுரம் இடையே பகுதி தூரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போல தாம்பரம்- நாகர்கோவில் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 9-ஆம் தேதி வரை திண்டுக்கல் வரை இயக்கப்படும். நாகர்கோவில்- தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 3-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை (திங்கட்கிழமை தவிர) நாகர்கோவில் திண்டுக்கல் இடையே பகுதி தூரம் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு தாம்பரம் சென்றடையும். மேற்கண்ட தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.