tamilnadu

திருவாரூர் - காரைக்குடி அகல பாதையில் ஜூன் 1 ‘டெமு’ ரயில் சேவை துவக்கம்

தஞ்சாவூர், மே 29- திருவாரூர் - காரைக்குடி இடையிலான ரயில் சேவை ஜூன் 1-ம் தேதி முதல் தொடங்கஉள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.காரைக்குடி-பட்டுக்கோட்டை-திருவாரூர்-திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 187 கி.மீ.,க்கு மீட்டர் கேஜ் பாதை,அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. முதற் கட்டமாக, காரைக்குடி-பட்டுக்கோட்டைக்கு, 2018 ஜூலையிலிருந்து வாரத்திற்கு இரண்டு முறை சோதனை ரயில் இயக்கப்பட்டது. எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால், ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, திருவாரூர்–பட்டுக்கோட்டை இடையே, மார்ச் 29-ல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சேவையை உடனடியாக தொடங்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், திருவாரூர்–பட்டுக் கோட்டை–காரைக்குடி இடையே டெமு பயணிகள் ரயிலை இயக்க உள்ளதாக தென்னகரயில்வே அறிவித்து அதற்கான அட்டவணையும் வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 1-ம் தேதி முதல்திருவாரூரிலிருந்து (வண்டி எண்: 06847) காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில்நின்று, பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு காலை 11.30 மணிக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து காலை 11.32 மணிக்குபுறப்பட்டு, ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயங் குடி, அறந்தாங்கி, வாளரமாணிக்கம், பெரியகோட்டை, புதுவயல், கண்டனூர் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று, பின்னர் மதியம் 2.15 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்தை அடையும் எனவும், எதிர் மார்க்கத்தில், காரைக்குடியில் இருந்து (வண்டி எண்: 06848)மதியம் 2.30 மணிக்குப் புறப்படும் ரயில் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு மாலை 5.18 மணிக்கு வந்து சேரும், பின்னர் அங்கிருந்து மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.30 மணிக்கு திருவாரூர் சென்றடையும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் சேவை ஜூன் 1-ம்தேதி முதல் தொடங்கி, ஆகஸ்ட் 30-ம் தேதிவரை (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) வாரத்தில்6 நாட்கள் மட்டும் இயங்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.