tamilnadu

திருநெல்வேலி முக்கிய செய்திகள்

வனப்பகுதியில் எரிந்த காட்டுத்தீ அணைப்பு

திருநெல்வேலி, ஜூன் 2-நெல்லை மாவட்டம் களக்காடு வனப்பகுதியில் ஏற்பட்டதீயை 3 நாட்களுக்குபின் இளைஞர்கள் உதவியுடன் வனத்துறையினர் போராடி அணைத்தனர்.களக்காடு வனப்பகுதியில் போதிய மழை இல்லாததால் கடும் வெப்பம் நிலவுகிறது. மரங்கள், செடி, கொடிகள் நீரின்றி காய்ந்து வந்த நிலையில் கடந்த 30 ந் தேதிமலை உச்சியில்தீப்பிடித்து மளமளவென பற்றி எரிந்தது.இதை அறிந்த வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், உள்ளூர் இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் . மீண்டும் மீண்டும் தீ பற்றி எரிந்த நிலையில் சனிக்கிழமை மாலைக்குள் முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டதாகவும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

குளங்கள் தூர்வாரும் பணி

திருநெல்வேலி, ஜூன் 2-நெல்லை மாவட்டம் காவல்கிணறு நீர்நிலை மற்றும்சுற்றுச் சூழல் பராமரிப்பு குழு, அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யாதும் ஊரே அமைப்பு இணைந்து குளங்கள் தூர்வாரும் பணியை செய்ய முன்வந்தன. இந்தஅமைப்புகள் காவல்கிணறு பகுதியில் உள்ள மணிமாலைபுதுக்குளம், விநாயகர் புதுக்குளம், பெருமாள் புதுக்குளம்ஆகிய மூன்று குளங்களை தத்தெடுத்து தூர்வார முடிவுசெய்தன. இதையடுத்து குளங்கள் தூர்வாரும் பணியைமாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கிவைத்தார். மேலும் நீர்நிலை பகுதிகள், குளங்கள், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில், தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டோபர், தலைவர் ராமராஜன், ஆலோசகர் விதுபாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய கட்டடத்தில் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் : ஆணையர்

தூத்துக்குடி, ஜூன் 2-கோவில்பட்டி பார்க் கிழக்கு சாலையில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் நகராட்சி அலுவலகம் திங்கள்கிழமை முதல் செயல்படும். இதுகுறித்து, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் அச்சையா வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவில்பட்டி நகராட்சி அலுவலக புதிய கட்டடம் ரூ. 5 கோடி மதிப்பீட்டில்பார்க் கிழக்கு சாலையில், அம்மா உணவகம் அருகே கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடத்தை தமிழக முதல்வர்எடப்பாடி கே.பழனிசாமி 2019 பிப். 27ஆம் தேதி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில், திங்கள்கிழமை முதல் நகராட்சி அலுவலகம் பார்க் கிழக்கு சாலையிலுள்ள புதிய கட்டடத்தில் செயல்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.