tamilnadu

திருச்சிராப்பள்ளி மற்றும் நாகப்பட்டினம் முக்கிய செய்திகள்

வீட்டு பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை

திருச்சிராப்பள்ளி, மே,5-திருச்சி திருவெறும்பூர் அடுத்த பூலாங்குடி காலனி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராமநாதன்(42) பூச்சி மருந்துக் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 30ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் முசிறியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். சனிக்கிழமை இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 30 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை போனது. இச்சம்பவம் குறித்து நவல்பட்டு காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


40 கிலோ கஞ்சா பறிமுதல் 

நாகப்பட்டினம், மே 5-நாகை மாவட்டம் வேதாரணியம் கடற்கரை சன்னதி சாலையில் தம்பிக்கோட்டையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் இலங்கைக்குக் கடத்திச் செல்வதற்காக மறைத்து வைத்திருந்த 40 கிலோ கஞ்சா சனிக்கிழமை பிடிபட்டது. கள்ளப் படகு மூலமாக இலங்கைக்குக் கடத்திச் செல்வதற்காக 20 கஞ்சா பொட்டலங்கள்(ஒவ்வொரு பொட்டலமும் 2 கிலோ எடை) என மொத்தம் 40 கிலோ கஞ்சாவை கடலோரக் காவற் படையினர் பறிமுதல் செய்தனர். 

;