tamilnadu

திருச்சிராப்பள்ளி முக்கிய செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் மின் வெட்டு: நோயாளிகள் அவதி  

திருச்சிராப்பள்ளி, நவ.8- திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தண்டலைப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதால் நோயாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே ஜெனரேட்டரில் உள்ள பழுதுகளை நீக்கி தொடர்ந்து மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தண்டலைப்புத்தூர் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் நாகராஜ், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இலவச கறவை மாடு, வெள்ளாடு வழங்க மாற்றுத்  திறனாளிகள் சங்கம் கோரிக்கை 

திருச்சிராப்பள்ளி, நவ.8- மாற்றுத்திறனாளி களுக்கு ரயில் பாஸ், பஸ் பாஸ் பெறுவதற்கு மருத்து வர் சான்றை மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகத்தி லேயே வழங்க வேண்டும். வாடகை வீட்டில் குடி யிருக்கும் மாற்றுத்திறனாளி களுக்கு குடிசை மாற்று வாரி யத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்க வேண்டும்.  இலவச கறவைமாடு, வெள்ளாடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்பு உரிமைக்கான சங்கம்  சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காத்தி ருப்பு போராட்டம் நடை பெறும் என அறிவிக்கப் பட்டது.  இதையடுத்து திருச்சி மேற்கு வட்டாட்சியர் தலை மையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்க மாவட்டச் செயலாளர் கோபிநாத், மாவட்டத் தலை வர் ஜெயபால், புறநகர் மாவட்டத் தலைவர் குமார், கிழக்கு பகுதி தலைவர் அந்தோணி சேகர், செயலா ளர் சரவணன், மணிகண்டம் ஒன்றிய தலைவர் குமார், செயலாளர் ஆரோக்யராஜ், பொருளாளர் தனலட்சுமி, அந்தநல்லூர் ஒன்றிய துணை செயலாளர் நந்தினி, திருவெறும்பூர் ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்தி ரன், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் வெற்றிச் செல்வன் மற்றும் சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைய டுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது.