பெரம்பலூர் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
66 வயது முதியவருக்கு 5 ஆண்டு சிறை
பெரம்பலூர், ஜூலை 11- பெரம்பலூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 66 வயது முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட் தீர்ப்ப ளித்துள்ளது. பெரம்பலூர் அருகே எளம்பலூர் வடக்கு காலனியைச் சேர்ந்த தர்மலிங்கம்(66) என்பவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். அப்போது சிறுமி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் திரண்டு சிறுமியை மீட்டு, தர்ம லிங்கத்தை காவல்துறையில் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவலர்கள், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து முதியவர் தர்மலிங்கத்தை கைது செய்தனர். மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் தர்மலிங்கம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்து சிறுமியிடம் சில்மிஷம் செய்த 66 வயது முதியவர் தர்மலிங்கத்திற்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அப ராதம் கட்ட தவறினால் கூடுதலாக ஆறு மாதம் சிறைத் தண் டனை அனுபவிக்க வேண்டும் என மகிளா கோர்ட் நீதிபதி மலர்விழி தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
கரூரில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து
கரூர், ஜூலை 11- திருச்சியில் ரயில் பாதைப் பணிகள் ஜூலை 12-ம் தேதி நடை பெறுவதால் கீழ்கண்ட ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. வரும் 12, 15, 19-ம் தேதிகளில் பாலக்காடு முதல் திருச்சி வரை செல்லும் பாசஞ்சர் ரயில் திருச்சிக் கோட்டை ரயில் நிலை யத்திலிருந்து திருச்சி ஜங்ஷன் வரை ரத்து செய்யப் பட்டுள்ளது. இதே போன்று திருச்சி ஜங்ஷனில் இருந்து இந்த ரயில் புறப்படுவதற்கு பதிலாக, திருச்சிக் கோட்டையில் இருந்து புறப்படும். 12-ம் தேதி 15 ஆம் தேதி மற்றும் 19-ம் தேதி திருச்சியில் இருந்து பாலக்காடு வரை செல்லும் பாஸ்ட் பாசஞ்சர் ரயில் திருச்சிக் கோட்டையில் இருந்து 60 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் ரயில் திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 12 ஆம் தேதி 15 ஆம் தேதி மற்றும் 19 ஆம் தேதி ஆகிய நாட்களில் புறப்பட்டு செல்லும். வரும் 12ம் தேதி முதல் 30 ம் தேதி வரை கரூர் முதல் திருச்சி வரை ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடை பெறுவதால் திருச்சி முதல் கரூர் வரை செல்லும் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதே போன்று கரூரில் இருந்து திருச்சி செல்லும் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்படுகிறது. சேலத்தில் இருந்து கரூர் செல்லும் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்படுகிறது கரூரில் இருந்து சேலம் செல்லும் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் அறிவியல் துறை முகாம் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 11- திருச்சி தேசிய கல்லூரி முதல்வர் சுந்தரராமன், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழக ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்தரின் ஆகியோர் வியா ழனன்று கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் நடைபெறும் அறிவியல் முகாம் திருச்சி தேசிய கல்லூரியில் ஜூலை 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. முகாமில் கலந்து கொள்ள எந்தவிதமான பயிற்சிக் கட்டணமும் இல்லை. உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து செலவு ஆகிய வற்றை ஒருங்கிணைப்பாளர்கள் வழங்குவார். முகாமில் கலந்து கொள்ள மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பில் 94.2 சதவீதமும், சிபிஎஸ்சியில் ஏ1 கிரேடு ஐசிஎஸ்இ 95 சதவீதத்திற்கு மேல் பெற்றி ருக்க வேண்டும். மேலும் தற்போது பதினொன்றாம் வகுப்பில் அறிவியல் புலத்தில் படிக்கும் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் தேசிய கல்லூரி இணை யதளத்தின் WWW.nct.ac.in மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல், நிகழ்ச்சி நிரல் மற்றும் பிற விவ ரங்களை கல்லூரி இணையதளத்தில் ஜூலை மாதம் 17ம் தேதி வெளியிடப்படும் என்றனர்.