தரங்கம்பாடி ஜூன் 18- தலைஞாயிறு கிரா மத்தில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி சர்க்கரை ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் மயி லாடுதுறை தலைஞாயிறு கிராமத்தில் என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க் கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் கடந்த ஆண்டு கரும்பு அரவை நிறுத்தப் பட்டது. இந்நிலையில் செவ்வாயன்று சர்க்கரை ஆலை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆலை தொழிலா ளர்களுக்கு 2018 மே மாதம் முதல் 2019 மே மாதம் வரை யிலான ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயி களுக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலை தொழிலா ளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர்.