tamilnadu

img

கம்பரசம்பேட்டை பகுதியில் திருநாவுக்கரசர் தீவிர பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.8-மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிவேட்பாளர் திருநாவுக்கரசர் திங்கள்கிழமை அன்று கம்பரசம்பேட்டையில் பிரச்சாரத்தை தொடங்கி முத்தரசநல் லூர், பழூர் ஊராட்சி, அல்லூர், திருச்செந்துறை, பெட்டவாய்த்தலை, வியாழன்மேடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார்.வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் திருநாவுக்கரசர் பேசியதாவது, கடந்த தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை தருவோம் என்று வாக்குறுதி அளித்த மோடிஅதனை நிறைவேற்றாமல் 5 ஆண்டுகளை முடித்து விட்டார். மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிறு, குறு தொழில்கள் நசுங்கி விட்டன. இந்த பகுதியில் படித்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். அதனால் இந்த தொகுதியில்தொழில் வளத்தை பெறுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.இந்த பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், முன்னாள் அமைச்சர் நேரு, காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அப்சரா ரெட்டி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் உள்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் வாக்கு சேகரித்தனர்.

;