tamilnadu

img

பெண் குழந்தைகளுக்காக விழா எடுக்கும் கிராம மக்கள்

புதுக்கோட்டை, ஜன.16- புதுக்கோட்டை மாவட்டம் கீர மங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில் பல தலைமுறைகளுக்கு முன்பு பிறந்து சிறுமியாக இறந்த கொப்பியம்மாள் என்ற பெண் குழந்தை யின் நினைவாக பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு பொங்கலுக்கு மறுநாள் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.  செரியலூர் கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைகள் வயதுக்கு வரு வதற்கு முன்பு இந்த திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும். பிறந்த சிறு குழந் தைகள் இருக்கும் வீட்டில் குழந்தைக ளின் தாய் அல்லது சகோதரிகள் கலந்து கொள்வார்கள். திருவிழாவில் பங் கேற்கும், குழந்தைகள், பெண்கள் திருவிழா முடியும் வரை விரதம் இருந்து கலந்து கொள்ள வேண்டும்.  செரியலூர் கிராமத்தில் பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் காலை யில் வெற்றுப் பொங்கல் வைத்து 3 படையல் வைத்து ஒரு படையலை விரதம் இருப்பவர்கள் சாப்பிடவும் மற்ற இரு படையல்களை ஒரு ஓலைக் கூடையில் இரு பெரிய சாணிப் பிள்ளை யார்களுடன் 92 சிறு சாணப் பிள்ளை யார் செய்து அதில் கூழைப் பூ, ஆவாரம் பூ, அருகம்புல், வேப்பிலை, கரும்பு, வெல்லம் ஆகியவற்றை அந்த ஓலைக்கூடையில் வைத்து கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பாலை மரத்தடியில் கிராமத்தின் அனைவரும் ஒன்று கூடி பெண்கள், பெண் குழந்தை கள் கும்மியடித்து வழிபாடு செய்து அணிவகுத்து தீர்த்தான் ஊரணி வரை கொண்டு சென்றனர்.

தொப்பித் திருவிழா

அங்கு கூடையில் உள்ள பொங்கலை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு மற்ற பொருட்களை குழியில் புதைத்துவிட்டு ஒரு சிறு பிள்ளையாரை அருகில் உள்ள ராக்காச்சி அம்மன் கோயில் காட்டில் வைத்து வழிபட்டுச் சென்றனர். இந்த திருவிழாவை கொப்பித் திருவிழா என்று இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த திரு விழாவில் ஏராளமான பெண் குழந்தை கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்ட னர். மேலும் திருவிழாவைக் காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். இது குறித்து அந்த பகுதி பெண்கள் மற்றும் கிராம மக்கள் கூறும் போது,  காத்தான்- தீர்த்தான் என இரு சகோ தரர்கள் முந்தைய பல தலைமுறை களுக்கு முன்பு வாழ்ந்துள்ளனர். அதில் காத்தான் மகள் கொப்பி அம்மாள் சிறு குழந்தையாக இருக்கும் போது தனது பெரியப்பா தீர்த்தான் வீட்டுக்கு காட்டுப் வழியாக சென்று காணாமல் போய்விட்டார். பல நாட்களுக்கு பிறகு ஊரின் மையப்பகுதியில் உள்ள பாலை மரத்தின் மேல் இருந்து அம்மை நோய் தாக்கி இறந்து கீழே விழுந்ததை பார்த்து கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.  அதன் பிறகு இந்த கொடிய நோயான அம்மைநோய் வந்து யாரும் இறக்கக் கூடாது என்பதற்காக அம்மைக்கு பலி யான கொப்பியம்மாளை நினைத்து சிறு பெண் குழந்தைகள் அம்மைக்கு எதிரான நோய்த் தடுப்பு மூலிகைகளுடன் ஊர்வ லமாகச் சென்று தீர்த்தான் ஊரணியில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. இது பன்நெடுங்காலமாக உள்ளது. அதனால் காலங்கள் மாறினா லும் கலாச்சாரத்தை மாற்ற விரும்பா மல் கிராமத்தினர் இந்த வழிபாட்டைச் செய்து வருகிறோம். வெளியூர், வெளி நாடுகளில் வசிப்பவர்களும் இந்த நாளில் சொந்த ஊருக்கு வந்துவிடுவார்கள் என்றனர். கொப்பியம்மாள் இறந்து விழுந்த தாக சொல்லப்படும் பழமையான பாலை மரம் இன்னும் கிராமத்தின் மத்தியில் இருப்பதால் அந்த மரத்தடியில் குழந்தைகள் படையல் பொருட்களை வைத்து கும்மியடித்து வழிபாடுகள் நடத்திய பிறகு படையல் பொருட்களு டன் ஊர்வலமாகச் சென்றனர்.
 

;