tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதிக்குழு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் தெருமுனை கூட்டம் ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் எதிரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் வேளாங்கண்ணி தலைமை வகித்தார். கூட்டத்தில் ‘தமிழ் மொழியில் கம்யூனிஸ்ட்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், ‘தமிழக தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சி’ என்ற தலைப்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, ‘தமிழக ஜனநாயகத்தில் கம்யூனிஸ்ட்களின் தியாகம்’ என்ற தலைப்பில் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது நிறைவுரையாற்றினார். கூட்டத்தில், தீக்கதிர் திருச்சி பதிப்பு முன்னாள் பொது மேலாளர் அனந்தராஜன், பகுதிக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பகுதிக்குழு உறுப்பினர் ரகுபதி வரவேற்றார். முடிவில் மாவட்டக்குழு உறுப்பினர் வீரமுத்து நன்றி கூறினார்.