நாகை மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற வாலிபால் போட்டியில் செம்பனார்கோவில் கலைமகள் பள்ளி அணி வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களை, கலைமகள் கல்வி குழுமத்தின் நிறுவனர் நெடுஞ்செழியன், செயலர் ஜெயபிரகாசம், நிர்வாக இயக்குநர் என்.எஸ்.குடியரசு, பள்ளி முதல்வர், உடற்கல்வி ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டி வாழ்த்தினர்.