அறிவியல் இயக்கம் கோரிக்கை
புதுக்கோட்டை, ஆக.7- மத்திய அரசு சுற்றுச்சூ ழல் தாக்க அறிக்கையை அனைத்து மாநில மொழி களிலும் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தி உள்ளது. அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செய ற்குழு கூட்டம் இணைய வழி யாக மாவட்டத் தலைவர் க.சதாசிவம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் மு.முத்துக்குமார் முன்னி லை வகித்தார். மாநில செய ற்குழு முடிவுகளை விளக்கி லெ.பிரபாகரன், அ.மணவா ளன் ஆகியோர் பேசினர். மாநில தலைவர் சு.தினகரன், துணைதலைவர் வெ.சுகு மாறன் ஆகியோர் சுற்றுச்சூ ழல் தாக்க அறிக்கை மற்றும் புதிய தேசிய கல்வி க்கொள்கை குறித்து உரை யாற்றினர். கூட்டத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூ ழல் தாக்க அறிக்கையை மாநில மொழிகளில் வெளி யிட வேண்டும். கருத்து தெரி விப்பதற்கான காலக்கெ டுவை ஆகஸ்ட் மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும். புதிய கல்விக்கொள்கையில் மாநில உரிமைகளுக்கு மதி ப்பு கொடுத்து உரிய திரு த்தங்களை மேற்கொண்டு மீண்டும் அமல்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் சிறப்பு மருத்துவர்களை உள்ளடக்கிய கொரோனா மக்கள் ஆலோசனை மை யத்தை துவக்க வேண்டும். பள்ளிகள் முழுவதும் திறக்க முடியாத நிலை யில், ஆன்லைன் கல்வியை காரணம்காட்டி கல்விக் கட்ட ணங்கள் வசூல் செய்யும் தனி யார் பள்ளிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஆகஸ்ட் 11 அன்று புதுக்கோ ட்டை முன்னாள் மாவட்ட ஆட்சியர் பொருளாதார நிபு ணர் டாக்டர் ஆத்ரேயா உள்ளி ட்டோரை இணைத்து இணைய வழியில் அறி வொளி இயக்கத்தின் வெற்றி விழாவை நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.