தரங்கம்பாடி, ஜூலை 10- இந்தியா வந்து தமிழ் மொழிக்காக உழைத்து ஆசிய மொழிகளிலேயே தமிழை முதன் முதலாக காகிதத்தில் அச்சு இயந்திரம் மூலம் அச்சேற்றி பைபிளை தமிழில் முதன் முதலாக வெளியிட்ட ஜெர்மனி நாட்டவரான தமிழறிஞர் சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்த 314 ஆவது ஆண்டு தினம் வியாழனன்று நடைபெற்றது. 1706 ஜூலை 9 அன்று நாகை மாவட்டம், தரங்கம்பாடிக்கு கப்பல் மூலம் வந்தடைந்த சீகன்பால்குவுக்கு அப்போது வயது 24. மிக குறுகிய காலத்திலேயே தமிழ் மொழியை கற்று தமிழறிஞராகவே மாறி தமிழின் பழம்பெரும் நூல்களான திருக்குறள், தொல் காப்பியம், ஆத்திச்சூடி உள்ளிட்ட நூல்களை பல மொழிகளில் மொழிப்பெயர்த்து அச்சிட்டு வெளியிட்டு உலகறிய செய்தவர். 13 ஆண்டுகள் மட்டுமே தரங்கம்பாடியில் வாழ்ந்த சீகaன்பால்கு கல்வி, கலாச்சாரம், சீர்த்திருத்தம், தமிழ் தொண்டு என பல புரட்சிகளை 300 ஆண்டுகளுக்கு முன்பே செய்தவர். அவரது தினத்தையொட்டி தரங்கம்பாடியில் உள்ள அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த னர். தரங்கம்பாடி புதிய எருசலேம் ஆலய ஆயர் சாம்சன் மோசஸ், பிஷப் ஜான்சன் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜான் சைமன், ஆலய நிர்வாகிகள் ஜெயகரன் காபிரியேல், எபினேசர் பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.