tamilnadu

img

கடலில் கலக்கும் எண்ணெய்யை அகற்றுவது குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய படைப்பு

தேசிய அளவிலான  போட்டிக்குத் தேர்வு\

புதுக்கோட்டை, நவ.13- கடலில் கலக்கும் எண்ணெய் யை கப்பல் மூலம் அகற்றுவது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளி  8-ஆம் வகுப்பு மாணவர் உருவாக் கிய படைப்பு தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளது. பள்ளிக் கல்வித் துறை சார்பில் 47-ஆவது ஜவஹர்லால் நேரு அறி வியல் கண்காட்சியில் பங்கேற்பது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளி யில் வகுப்பு மாணவர்களுடன் ஆசி ரியர் சி.சந்திரபோஸ் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, கடலில் கலக்கும் எண்ணெய்யை அகற்று வது குறித்து 8-ஆம் வகுப்பு மாண வர் அ.செந்தில் அரசு யோசனை தெரிவித்துள்ளார். பின்னர், அம் மாணவரோடு இணைந்து இது தொ டர்பான படைப்பு உருவாக்கப் பட்டது. மாவட்ட அளவில் தேர்வாகிய இந்தப் படைப்பு, கரூரில் அண்மை யில் மாநில அளவில் நடைபெற்ற 47-ஆவது அறிவியல் கண்காட்சி யில் முதலிடம் பிடித்தது. இதைய டுத்து இந்தப் படைப்பு தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளது. மாணவர் செந்தில் அரசு மற்றும் வழிகாட்டி ஆசிரியர் சந்திரபோஸ் ஆகியோரை ஆட்சி யர் பி.உமா மகேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜய லட்சுமி, மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம், பள்ளித்தலைமை ஆசிரியர் ந.வள்ளிநாயகி உள்ளிட் டோர் பாராட்டினர்.

இது குறித்து ஆசிரியர் சந்திர போஸ் கூறியது: இராக்கில் இருந்து கப்பல் மூலம் சென்னை காமராஜர் துறைமுகத்துக்கு கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் கொண்டு வரப் பட்டது. அப்போது, எதிர்பாராத வித மாக எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சுமார் 2.5 டன் எண்ணெய் கடலில் கலந்து மாசடைந்தது. எண்ணெய்யை உடனே வெளியேற்ற போதுமான வசதி இல்லாமல் ஒரு கட்டத்தில் வாளி மூலமும் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இதற்கு பிரதான தொழில்நுட்பம் தேவை என்பதை அறிந்து இந்தப் படைப்பு உரு வாக்கப்பட்டது. அதாவது, கப்பலில் இரு புறமும் நெகிழி சக்கரங்களை பொருத்த வேண்டும். இந்த சக்க ரங்களை மோட்டாருடன் இணைத்து சுழலச் செய்யும்போது எண்ணெய் படலங்கள் சக்கரங்க ளை நோக்கி வரும். பின்னர், சக்க ரங்களில் அருகே உலோக தட்டு களைப் பொருத்தி அதன் வழியே கப்பலில் எண்ணெயை சேகரித்து விடலாம்.  இதன் மூலம் கடலில் கொட்டிய எண்ணெய்யை துரிதமாக அகற்று வதோடு, அகற்றப்பட்ட எண்ணெய் யை சுத்திகரித்து மீண்டும் உப யோகப்படுத்தலாம். சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படுவதோடு, கடல் உயிரினங்களும் பாது காக்கப்படும். மாநில அளவில் தேர் வாகி உள்ள எங்கள் படைப்பு தேசிய அளவிலும் தேர்வாகும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.