tamilnadu

முக்கிய குற்றவாளியை போலீஸ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

திருச்சி:
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான திருவாரூரைச்சேர்ந்த முருகனை, 7 நாட்கள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது.கர்நாடக மாநிலத்தில் நடந்த கொள்ளை வழக்குகள் தொடர்பாக பெங்களூரு போலீசார் திருவாரூர் முருகனை காவலில் எடுத்துவிசாரித்து முடித்தனர். இந்த நிலையில் லலிதாஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்குதொடர்பாக விசாரிக்க, திருச்சி தனிப்படை போலீசார் திருவாரூர் முருகனை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.14 நாட்கள்காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதிகேட்டனர். ஆனால் ஏழு நாட்களுக்கு அனுமதிவழங்கி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

;