திருச்சிராப்பள்ளி, பிப்.19- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சியில் முஸ்லிம் அமைப்பினர் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் என தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் திங்களன்று இரவு 10 மணிக்கு மேல் முஸ்லிம் இளைஞர்கள் திடீரென போராட் டதில் ஈடுபட்டனர். போராட்டம் நள்ளி ரவைத் தாண்டி செவ்வாயன்று தொடர்ந்து நடைபெற்றது. போராட் டம் குறித்து தகவல் அறிந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜு துணை கமிஷனர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா மல் இருக்க பாதுகாப்பினை பலப் படுத்தினர்.