tamilnadu

புதிதாக கட்டப்படும் வீட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டுகள்

திருநெல்வேலி, மே 13-பாளையங்கோட்டை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும்வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் மக்கள் பீதி அடைந்தனர். மேலப்பாட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அவரது வீட்டில் இரு முறை பலத்தவெடி சத்தம் கேட்டது.அங்கு சென்று பார்க்கையில்ஜன்னல் மற்றும் கதவுகள் சேதம் அடைந்திருந்தன.தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்திய போது நாட்டு வெடிகுண்டுகள் வெடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீட்டில் இருந்து மேலும் இரு நாட்டு வெடிகுண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கணேசனின் இரு மகன்களான சிவாமற்றும் அருள் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள்இருப்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார்தேடி வருகின்றனர்.