tamilnadu

img

ஏழைகள், சுய உதவிக்குழுக்களின் வங்கிக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 28- குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண வல்லுனர்கள், விஞ்ஞா னிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்க  வேண்டும். குடிநீருக்கு கட்டாய டெபாசிட் வசூலை நிறுத்த  வேண்டும். தொடர்ந்து இலவசமாக குடிநீர் வழங்க வேண்டும். 100 நாள் வேலையை, வேலை அடையாள அட்டை  உள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும். சட்டக் கூலி ரூ.256 -ஐ குறைக்காமல் வழங்க வேண்டும். பேரூராட்சி பகுதிக்கும்  நூறு நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். முதி யோர் உதவித்தொகையாக ரூ.3,000 வழங்க வேண்டும்.  பெண்கள், பொதுமக்கள், ஏழைகளுக்கு தொந்தரவு அளி க்கும் நுண் கடன் நிதி நிறுவனம் அடாவடி வசூலை தடுத்து  நிறுத்த வேண்டும். கொரோனா கால நிவாரண நிதியாக குடு ம்பம் ஒன்றுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும் என வலியு றுத்தி தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை இகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி புள்ளம்பாடி ஒன்றியம் வந்தலை கூடலூர் கிரா மத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன் விதொச  ஒன்றியச் செயலாளர் அடைக்கலராஜ் தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் பழநிசாமி துவக்கி வைத்தார். மண்ணச்ச நல்லூர் மேற்கு வாழ்மால்பாளையம் கிராமத்தில் நல்லய்யன்  தலைமையிலும், தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  சங்க ஒன்றிய தலைவர் முருகன் தலைமையிலும், லால்குடி யில் விதொச ஒன்றிய செயலாளர் பாலா தலைமையில், மாநில குழு உறுப்பினர் சந்திரன் துவக்கி வைத்தார்.  துறையூர் வட்டம் உப்புலியபுரம் ஒன்றியத்தில் உப்புலி யபுரம் பிடிஓ அலுவலத்தின் முன்பு வி.தொ.ச ஒன்றியதலை வர் கணேசன் தலைமையிலும், தா.பேட்டை ஊரக்கரை யில் ரெங்கராஜ் தலைமையிலும், திருவெறும்பூரில் விவசாயி கள் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் கே.சி பாண்டியன் தலை மையில், மாநில துணைத் தலைவர் முகமதுஅலி சிறப்புரை யாற்றினார்.  வாழவந்தான்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் முன்பு விவசாயிகள் சங்க புறநகர் மாவட்ட பொருளாளர் ராதா கிருஷ்ணன் தலைமையிலும், பத்தாளப்பேட்டையில் ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையிலும், மணப்பாறை  வட்டம் கருப்பூர் கிராமம் காரைகுளத்தில் விவசாய தொழிலா ளர் சங்க மாவட்ட துணை செயலாளர் கண்ணன் தலைமையி லும் நடைபெற்றது.
தஞ்சாவூர் 
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம் ஊரணி புரம், தோப்பநாயகம், நெய்வேலி ஆகிய இடங்களில் ஆர்ப்பா ட்டம், மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. விதொச  மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர்  பி.கோவிந்தராஜூ, விதொச ஒன்றியத் தலைவர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாாவட்ட த்தில் 11 ஒன்றியங்களில் 87 மையங்களில் நடைபெற்ற போரா ட்டத்தில் 3,020 பேர் 5,150 மனுக்களை அளித்தனர்.  தஞ்சாவூர் ஒன்றியம் திருக்கானூர்பட்டியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலா ளர் எம்.சின்னதுரை மற்றும் கலந்து கொண்டனர்.
பூதலூர் 
பூதலூர் வடக்கு ஒன்றியத்தில் முல்லைக்குடி, ஆற்காடு,  ஒரத்தூர், மாறனேரி, தோகூர், பாதரக்குடி, கிருஷ்ண ம்பேட்டை, திருச்சென்னம்பூண்டி உள்ளிட்ட 8 இடங்களில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.காந்தி உட்பட பலர் கலந்து  கொண்டனர். அம்மாபேட்டையில் விதொச மாவட்டச் செயலா ளர் கே.பக்கிரிசாமி, இராராமுத்திரைக் கோட்டையில், விவசா யத் தொழிலாளர்கள், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.  கலைச்செல்வி தலைமையில், ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு அளித்தனர்.
கும்பகோணம் 
கும்பகோணம் ஒன்றியத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், சி.நாகராஜ், பி. ஜேசுதாஸ் ஆகியோரும், பாபநாசத்தில் ஒன்றியச் செயலாளர் காதர் உசேன், உமாபதி, மாலதி ஆகியோரும், திருவையாறில் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, எம்.பழனி அய்யா, எம்.ராம், பிரதீப் ராஜ்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்ட னர். சேதுபாவாசத்திர ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரா வூரணி வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இரு இடங்களில் மனு  கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் 24, பாபநாசம் 8, அம்மாபேட்டை 7, பூத லூர் வடக்கு 8, திருவையாறு 8, திருக்காட்டுப்பள்ளி 8 என  மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பா ட்டம், மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
திருமயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விதொச ஒன்றிய செயலாளர் க.அடைக்கன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் எஸ்.சங்கர் சிறப்புரையாற்றினார். கீரனூரில் ஒன்றியச் ஒன்றிய செயலாள. க.ராஜேந்திரன் தலைமையிலும், கந்தர்வக்கோட்டையில் ஒன்றிய தலைவர் க.சக்திவடிவேல் தலைமையிலும், கறம்பக்குடியில் ஒன்றிய  தலைவர் எம.மணிவேல் தலைமையிலும், அன்னவாசலில்  ஒன்றிய செயலாளர் எம்.ஜோஷி தலைமையிலும், ஆலங்குடி யில் ஒன்றிய தலைவர் எஸ்.ஆறுமுகம் தலைமையிலும், பொன்ன மராவதியில் ஒன்றிய செயலாளர் ஏ.எல்.பிச்சை தலை மையிலும், ஆவுடையார்கோவிலில் ஒன்றிய செயலாளர் வே. வீரையா தலைமையிலும், மணமேல்குடியில் ஒன்றிய செய லாளர் எம்.ஆறுமுகம் தலைமையிலும் நடைபெற்றது.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசா யத் தொழிலாளர் சங்க நாகை ஒன்றியச் செயலாளர் எஸ். என். ஜீவாராமன் தலைமையில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர் வி.மாரிமுத்து சிறப்புரையாற்றினார்.
கீழ்வேளூர்
கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வி.தொ.ச.  ஒன்றியத் தலைவர் அ.சந்திரசேகர் தலைமை வகித்தார்.  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொ துச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் விளக்கவுரையாற்றினார். சி.பி.எம். கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் சங்க வட்டத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். குத்தாலம்  ஒன்றியம் பாலையூரில் சங்க ஒன்றியத் தலைவர் கே.என். ஸ்டாலின் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜி. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சீர்காழி
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்க வட்டச் செயலாளர் கே.கிருஷ்ணன் தலைமை வகித்தார். 
திருவாரூர் 
திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின்  மாவட்ட தலைவர் எம்.கலைமணி தலைமையேற்றார். நன்னி லம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளர்  சங்க ஒன்றியத் தலைவர் ஏ.சங்கர், செயலாளர் கே.எம்.லிங்கம் ஆகியோர் தலைமையில் சங்க மாநிலக்குழு உறுப்பி னர் ஜி.மாரியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக வட்டாட்சியரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  வி.தொ.ச மாவட்டச் செயலாளர் ஆர்.குமாரராஜா தலைமை  வகித்தார்.
அரியலூர்-பெரம்பலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டாட்சியரிடம் விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சி.ரமேஷ் கோரிக்கை மனுவை அளித்தார். உடன் சிபிஎம்  செயலாளர் ஆர்.மணிவேல், விதொச மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பெரம்ப லூர் பழைய பேருந்து நிலையம் முன்பு மாவட்டக்குழு உறுப்பி னர் கே.ராமு தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், விவசாயிகள் சங்க  மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.