மன்னார்குடி, மார்ச் 13- குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் போராட்டக்குழு தலைவர் ஜெர்மன்அலி தலை மையில் வியாழன் மாலை நடைபெற்றது. சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் தேசிய குடியுரிமை பதிவேடு தேசிய மக்கள் தொகை பதிவேடு இவைகளை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றாத மாநில அரசை கண்டித்தும், கோவை மாவட்ட எஸ்டிபிஐ மாவட்ட செயலா ளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் கோவை பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்தும் முத்துப்பேட்டை பேரூ ராட்சி அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.