tamilnadu

தரங்கம்பாடி முக்கிய செய்திகள்

வாலிபர்கள் ரத்த தானம்

தரங்கம்பாடி, மே 29-நாகப்பட்டினம் மாவட்டம் ஆக்கூர் விவேகானந்தா தொடக்கப் பள்ளியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் புதனன்று வட்டத் தலைவர் வீ.எம்.சரவணன் தலைமையில் நடைபெற்றது.சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சிங்காரவேலன் முகாமை துவக்கி வைத்தார். மருத்துவர்கள் சிவக்குமார், கார்த்திக், கோபி, பாலகிருஷ்ணன், ஓரியண்டல் பள்ளி தாளாளர் இக்ரம் ரசூல், பெஸ்ட் கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜ்கமல், தமுஎகச ஆக்கூர் கிளைத் தலைவர் ராமமூர்த்தி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏராளமானோர் ரத்த தானம் செய்தனர்.

சிபிஎம் பேரவை கூட்டம்

தரங்கம்பாடி, மே 29-காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கி, விவசாயத்தையும், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் திட்டங்களான ஹைட்ரோகார்பன், ஷேல்கேஸ் உள்ளிட்ட திட்டங்களால் ஏற்படும் கடுமையான பாதிப்புகள் குறித்து நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூரை அடுத்துள்ள டி.மணல்மேட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் பேரவை கூட்டம் நடைபெற்றது.மாவட்டச் செயலாளர் நாகைமாலி விளக்கவுரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், இராசையன்,ரவிச்சந்திரன், வட்டக்குழு உறுப்பினர் டி.கோவிந்தசாமி உள்ளிட்டோரும், விச, விதொச, வாலிபர், மாதர், மாணவர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

;