2 கோடி டன் உணவு தானியம் சேமிப்பு கிடங்குகளிலேயே வீணாகிறது கருத்தரங்கில் தகவல்
தஞ்சாவூர், ஜூலை.27- இந்தியாவில் ஆண்டுக்கு 20 மில்லியன் டன் உணவு தானியங்கள் சேமிப்பு கிடங்குகளிலேயே வீணாகிறது என தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் உமா தெரிவித்தார். தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவுப் பதன தொழில் நுட்பக் கழகத்தில் உணவு தானியங்களை சேமிக்கும் கிடங்கு களில் பொருத்தக்கூடிய சென்சார் தொழில்நுட்ப கருவி அறி முக கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கில் தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் உமா, சென்சார் கருவியை வெளியிட்டு பேசிய தாவது: இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 280 மில்லியன் டன் உணவு பொருட்கள் உற்பத்தியாகிறது. இதில் 250 மில்லி யன் டன் உணவுப் பொருட்கள் ஆண்டுதோறும் பொது மக்களால் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள பொருட்கள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுகிறது. இதில் 20 மில்லியன் டன் உணவு தானி யங்கள் சேமிப்பு கிடங்குகளில் வீணாகிறது. வீணாகும் உணவு தானியங்களை குறைக்க வேண்டும் என்பதற்காக தான் சென்சார் கருவி கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் 100 வகையான வாழை வகைகள் உள்ளன. தற்போது வாடல் நோய் தாக்கம் அதிகமாக வரு கிறது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். முன்பு விமானம் மூலம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு வாழைப் பழங்கள் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது கப்பல் மூலம் அதிகளவில் ஐக்கிய அரபு நாடுகள், ஐரோப்பிய நாடு களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது” என்றார். உணவுப் பதன தொழில்நுட்பக் கழக இயக்குநர் அனந்த ராமகிருஷ்ணன் பேசினார். லண்டன் ப்ரூனேல் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் அகமது தய்யிப், லண்டன் என்கொய ரிங் மைன்ட்ஸ் நிறுவனப் பொறியாளர் அலோய்ஸ் கிளிங், இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழக முன்னாள் இயக்குநர் கே.சிங்கார வடிவேல், முனைவர் ஏ.அமுதசுரபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்திடக் கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, ஜூலை 27- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத் தின் அய்யப்பநகர் கிளை முதல் வட்ட மாநாடு சனிக்கிழமை அன்று திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க தலை வர் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார். கிளை நிறு வன தலைவர் வெங்கடசுப்பிரமணியன், மூத்த உறுப்பினர் தொளசிராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிஎன்ஜி பிஏ மாவட்ட தலைவர் செந்தமிழ்செல்வன் துவக்கவுரையாற்றி னார். செயலாளர் அறிக்கையை செயலாளர் ராஜாராமன் வாசித்தார். நிதிநிலை அறிக்கையை பொருளாளர் கல்யாண ராமன் சமர்ப்பித்தார். மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு தலைவர் சிராஜூதீன், வருவாய்த்துறை முன்னாள் மாநில தலைவர் சுடலையாண்டி, வணிக வரித்துறை அலுவலர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் லெட்சுமணன், டிஎன்ஜிபிஏ மாவட்ட பொருளாளர் புரு ஷோத்தமன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் வளன்அரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் ஓய்வூதியத்திற்கு வருமான வரி பிடித்தம் செய்ய கூடாது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி 1.1.2016 முதல் 30.9.2017 வரை உள்ள காலத்திற்கான 21 மாத ஊதிய நிலுவை தொகையினை வழங்க வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள புதிய பென்சன் திட்டத்தினை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தினை நடைமுறை படுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை முன்மொழிந்து துணைத்தலைவர் சந்தனராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் மீனாட்சிசுந்தரம், சந்திர சேகரன், உறுப்பினர்கள் பிரதாபஹரன், பிரகாஷ் ஆகி யோர் பேசினர். டிஎன்ஜிபிஏ மாநில துணைத்தலைவர் ஜோதி சிறப்புரையாற்றினார். முன்னதாக துணைத்தலைவர் நாகராஜன் வரவேற்றார். இணை செயலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.