தஞ்சாவூர், மே 27-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் பெரியதெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் செ.இராமநாதன். இவருக்கு, ராமேஸ்வரத்தில் கல்வியாளர்கள் சங்கமம் நடத்திய விழாவில் நல்லாசிரியர் விருதான “மாற்றங்களின் நாயகன் விருதை” பள்ளிக்கல்வி இணை இயக்குநர் பொன்னையா வழங்கினார். நிகழ்ச்சியில் குமுதம் சிநேகிதி இதழாசிரியர் லோகநாயகி ராமச்சந்திரன், கல்வியாளர்கள் சங்கமம் ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். விருது பெற்ற ஆசிரியரை, தலைமையாசிரியர் வீரம்மாள்,ஆசிரியர்கள் பாராட்டினர்.