tamilnadu

தஞ்சாவூர் மற்றும் அறந்தாங்கி முக்கிய செய்திகள்

தஞ்சாவூரில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூர், பிப்.7- தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்.8 அன்று தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.  முகாமில் சென்னை, திருப்பூர், கரூர், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 5 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ கல்வி தகுதிகளுக்குரிய  வேலை நாடுவோருக்கு 5000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பினை அளிக்க உள்ளனர்.  மேலும் தனியார் நிறுவனங்கள், தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்க ளின் எண்ணிக்கை, எதிர்பார்க்கும் கல்வித்தகுதி மற்றும் ஊதியம் போன்ற விவரத்தை www.dddeotnj@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கவும். மேலும் விவரங்களுக்கு 04362-237037 தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரி வித்துள்ளார்.

தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அறந்தாங்கி, பிப்.7- புதுக்கோட்டை மாவட்ட தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்ட வழிபாட்டுதலின்படி நடந்த உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சிக்கு அறந்தை ரோட்டரி தலைவர் தங்கத்துரை தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ரவி, மாவட்ட நல கல்வியாளர் வெங்கட்ராமன், முன்னாள் தலைவர் முரளிதரன் பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மருத்துவர்கள் ராதா கிருஷ்ணன், மனோஜ், முகமது ரபீக், சிவபாலசேகரன், இளைய ராஜா, செவிலியர்கள் கண்கா ணிப்பாளர் காந்திமதி, ரங்கநாயகி மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் பொன்முத்துராமலிங்கம், கலா நேசன் என்.செந்தில்குமார் ஜி.செந்தில்குமார், வருங்கால தலைவர் தவசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.