tamilnadu

img

தஞ்சாவூர் மற்றும் சீர்காழி முக்கிய செதிகள்

3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை

போக்சோவில் உறவினர் கைது

தஞ்சாவூர், ஆக.14–  தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி மேலை யூரை சேர்ந்தவர் பாண்டியன்  (43). இவரும், இவரது அண்ணனும் பக்கத்து பக்க த்து வீடுகளில் வசித்து வரு கின்றனர். பாண்டியனின் அண்ணனுக்கு 3 வயதில் ஒரு  குழந்தையும், 6 மாத கைக் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் தனி யாக விளையாடி கொண்டி ருந்த, 3 வயது குழந்தைக்கு, பாண்டியன் பாலியல் ரீதி யாக தொல்லை கொடு த்துள்ளார். வியாழக்கிழமை மாலை குழந்தை சிறுநீர் கழிக்க முடியாமல் சிரம ப்பட்ட நிலையில், இதை  பார்த்த தாயார், குழந்தை யிடம் விசாரித்துள்ளார். அப்போது பாண்டியன் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது. குழந்தை உட னடியாக தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகி ச்சைக்காக அனும திக்கப்பட்டுள்ளார். இது குறித்து குழந்தையின் தாய்  கொடுத்த புகாரின் பெய ரில், ஒரத்தநாடு காவல்து றையினர், பாண்டியனை போ க்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொள்ளிடம் கடைமடையில் பாசனத்திற்கு  

தண்ணீர் வருவது எப்போது?  விவசாயிகள் கேள்வி

சீர்காழி, ஆக.14- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் வருடந்தோறும் சுமார் 10,500 ஹெ க்டேர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகு படியும் 12,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் சம்பா  நெற்பயிர் சாகுபடியும் நடைபெறுவது வழக்க மாக இருந்து வருகிறது. கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 42 ஊராட்சிகளில் உள்ள விளைநிலங்களில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மின்  மோட்டார்கள் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வசதி செய்து வருகின்றன. இரு ந்தும் சில இடங்களில் நிலத்தடி நீர் உப்பு  நீராக மாறியுள்ளதால் மின் மோட்டார்கள் இய க்கங்களின் எண்ணிக்கை குறைந்தும் உள்ளன. சில பகுதிகளில் டீசல் இன்சின்க ளும் நீர் நிறைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  விவசாயிகள் குறுவை நெல் சாகுபடிக்கு நிலத்தடி நீரையும் அதனைத் தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரையும் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்த்திருந்தனர். கடந்த ஜூன் 12 ஆம்  தேதி மேட்டூர் அணை திறந்தும் பிரதான  ராஜன் வாய்க்காலில் மட்டும் ஆடிப்பெருக்கு விழாவுக்கு தண்ணீர் வந்தது. தற்போது பிர தான வாய்க்காலில் தண்ணீர் முற்றிலும் குறை ந்து விட்டது.  அனைத்து பாசன கிளை வாய்க்கா ல்களிலும் இதுவரை பாசனத்திற்கு தண்ணீர்  வரவில்லை. பாசன கிளை வாய்க்கா ல்களில் சில வாய்க்கால்கள் மட்டுமே தூர்வா ரப்பட்ட நிலையில் பல வாய்க்கால்கள் தூர்வா ரப்படவில்லை. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் வந்து சேரவில்லை. தண்ணீர் கடை மடை பகுதிக்கு கிடைக்காததால் நிர்ணயிக்க ப்பட்டிருந்த குறுவை நெற்பயிர் சாகுபடியின் நிலப்பரப்பு 30 சதவீதத்திற்கும் மேல் குறைந்துவிட்டது.  அதேநேரத்தில் இதுவரை கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து ஆரம்ப நிலையில் கூட இல்லாமல் போனதால் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. விவசாயிகள் தற்போது சம்பா சாகுபடிக்கு தீவிரம் காட்டி  வருகின்றனர். ஆனால் இதுவரை தண்ணீர் வராதது விவசாயிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சம்பா சாகுபடிக்காவது விவசாயிகளின் நலன் கருதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து  விட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை  எடுக்க வேண்டும். தண்ணீர் எளிதில் வாய்க்கா ல்களில் பாசனத்திற்கு வரும் வகையிலும் அளவுக்கு அதிகமாக வயல்களில் தண்ணீர் தேங்கினால் உடனடியாக வெளியேறிச் செல்லும் வகையிலும் அனைத்து பாசன கிளைகளையும் உடனடியாக தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை செய ற்பொறியாளருக்கும் கோரிக்கை மனு அனு ப்பப்பட்டுள்ளது.

சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வணிகம் ரூ.75,562 கோடி

மன்னார்குடி, ஆக.14-  கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி  2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் மொத்த வணிகம் ரூ.75 ஆயிர த்து 562 கோடியாக அதிகரித்துள்ளது என வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி காமகோடி தெரி வித்துள்ளார்.  மேலும் அவர் வங்கியின் வைப்புத் தொகை ரூ.41 ஆயிரத்து 26 கோடியாகவும், கட ன்கள் ரூ.34 ஆயிரத்து 536 கோடியாக உள்ளது  என்றும் வங்கியின் மொத்த லாபம் ரூ.356 கோடி அதிகரித்துள்ளாத தெரிவித்தார். நிகர  லாபம் ரூ.154 கோடி. நிகர வராக்கடன் 2.11 சத வீதமாகவும் உள்ளது என்றும், சொத்தின் மீதான வருவாய் 1.23 சதவீதம் உள்ளது.  நிகர  மதிப்பு கடந்த இதே காலாண்டில் 978 கோ டியிலிருந்து ரூ.5 ஆயிரத்து 355 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கி இதுவரை 700 கிளைகளையும், ஆயிரத்து 788 ஏடிஎம் மை யங்களையும் 9 ஆயிரத்து 339 வணிக முனை பயன்பாடு இயந்திரங்களையும் கொண்டு இயங்கி வருகிறது என வங்கி முதன்மை செயல் அதிகாரி காமகோடி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

காளான் வளர்ப்பு பணிகள் ஆய்வு

நாகப்பட்டினம், ஆக.14- நாகப்பட்டினம் ஒன்றியம், பெருங்கடம்ப னூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (2019 -2020), காளான் வளர்ப்புப் பணி மேற்கொ ள்ளப்பட்டது. இதற்காகக் கொட்டகை அமைப்பு மற்றும் காளான் வளர்ப்புக்கான ஆயத்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர், மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட முகமை-கூடுதல் ஆட்சியர் எ.எஸ்.பிர சாந்த் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அய்யூர், திருக்குவளை வட்டத்திலேயே இருக்க வேண்டும்

மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் கோரிக்கை மனு

நாகப்பட்டினம், ஆக.14- நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து,  மயிலாடுதுறையைத் தலைமை இடமாகக்  கொண்டு புதிய மாவட்டம் அமையவிருக்கி றது. இதனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம், செம்பனார்கோவில், நாகை மாவட்டத்தில் தலைஞாயிறு, திருமருகல் ஆகியவை புதிய வருவாய் வட்டங்களாக உருவாக இருக்கின்றன.   தற்போது தலைஞாயிறு ஒன்றியத்திலும் திருக்குவளை வட்டத்திலும் அமைந்துள்ள அய்யூர் என்னும் ஊர், திருக்குவளைக்கு மிக  அருகில் உள்ள ஊராகும். இதனை எந்தக் கார ணத்திற்காகவோ, தேவையில்லாமல், அய்யூர் மக்களின் விருப்பத்திற்கு எதிராகப் புதிதாக உருவாகும் தலைஞாயிறு வட்ட த்தில் இணைக்கப்படப் போவதாகத் தெரிய வருகிறது. இப்படி, அய்யூர், தலைஞாயிறு வட்ட த்தில் இணக்கப்பட்டால், அய்யூரிலிருந்து தலைஞாயிறு செல்வதென்பது மக்களுக்குத் தூரம் மட்டுமல்லாமல், சிரமங்களும் ஏற்ப டும். எனவே, எக்காரணம் கொண்டும் தற்போது, திருக்குவளை வட்டத்தில் உள்ள அய்யூர் ஊரைப் புதிய தலைஞாயிறு வட்ட த்தில் இணைக்கக் கூடாது, அது திருக்கு வளை வட்டத்திலேயே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அய்யூர் மக்களின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு  தலைமையில் நாகை மாவட்ட ஆட்சியர் பிர வீன் பி.நாயரிடம் நேரில் கோரிக்கை மனு அளி க்கப்பட்டது.