tamilnadu

img

காலமானார்

தஞ்சாவூர், ஜூன் 17- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நெய்வாசல் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.சோமு(105), உடல்நலக் குறைவு மற்றும் வயதுமூப்பு காரணமாக காலமானார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 20 ஆண்டுக்கு முன்பு தன்னை இணைத்துக் கொண்டவர். கட்சி மீது மிகுந்த பற்றுக் கொண்ட தோழர் ஆர்.சோமு கட்சியின் அனைத்து போராட் டங்களிலும் பங்கேற்றவர். கடலூரில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அன்னாருக்கு 4 மகன்கள் உள்ளனர். மனைவி ஏற்கனவே காலமாகி விட்டார். ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு காலமான தோழரின் இறுதி நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.  ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் எம்.ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ. நீலமேகம், ஒன்றியச் செயலாளர் என்.சுரேஷ்குமார் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.