tamilnadu

img

எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை ஆதரித்து தா.பாண்டியன் பிரச்சாரம்

மன்னார்குடி, ஏப்.9-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் சிறப்புரையாற்றினார். மன்னார்குடி பந்தலடியில் திங்களன்று நடைபெற்ற கூட்டத்திற்கு திமுகமாநில சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் தலைமை வகித் தார். சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ் முன்னிலை வகித்தார். திமுக தலைமைசெயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் ஜி.பாலு உரையாற்றினார். மதிமுக மாவட்ட செயலாளர் பி.பாலச்சந்தர், வணிகர் அணி மாநில துணைச் செயலாளர் சு.ஞானசேகரன், ஒன்றியசெயலாளர் க.தனராஜ், நகர செயலாளர் வீரா கணேசன், மாவட்ட பிரதிநிதி எம்.என்.பாரதிமோகன், சிபிஎம் நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம், சிபிஐ ஒன்றிய செயலாளர் ஆர்.வீரமணி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் அருள்ராஜன், நகரசெயலாளர் வி.கலைச்செல்வன், திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் மு.தமிழ்செல்வம், விசிக தலைவர்கள் ரமணி, இரா.செங்குட்டுவன் உள்ளிட்டகூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். பொதுக் கூட்டத்தில் 500 பெண்கள் உள்பட மூன்றாயிரத்திற்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.

;