புதுக்கோட்டை, ஜூலை 6 - முதன்மை நிலைய விளையாட்டு மைய விடுதிகளில் 2-ம் கட்ட மாணவ, மாணவியர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவிக்கையில், 2019-2020-ம் கல்வியாண்டில் 2-வது கட்டமாக மாநில அளவிலான தேர்வுகள் 10.7.2019 அன்று காலை 8 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் தடகளம்(மாணவியர்) மேசைப்பந்து (மாணவியர்) ஜிம்னாஸ்டிக்ஸ் (மாணவர்) மற்றும் நீச்சல் (மாணவ-மாணவியர்) சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கில் டென்னிஸ் (மாணவர்) மற்றும் சென்னை நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் இறகுபந்து (மாணவர்) விளையாட்டிலும் நடத்தப்பட உள்ளது. சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி- சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலி, சிறுமியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி- சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு மைய விடுதிகளில் சேர்வதற்கான ஆன்-லைன் விண்ணப்ப படிவத்தை www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 9.7.2019 மாலை 5 மணிக்குள் ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும் என்றார்.